மின் கட்டணத்தை குறைக்க திட்டம்!

13 0

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விலைத்திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பில் மக்கள் எழுத்து மூலமான யோசனைகளை முன்வைக்கும் காலம் எதிர்வரும் 8ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.