மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

15 0
கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு  வளிமண்டலவவியல் திணைக்களத்தின் இயற்கை அபாயங்கள் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை நிலை காரணமாக அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாகவும் இருக்கும் இயற்கை அபாயங்கள் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.