சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று புதன்கிழமை (26) ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுவதுடன், மாணவர்கள் பாடசாலைக்கு வந்து திரும்பி செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இரண்டாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதோடு, இதன் காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
மட்டக்களப்பு