மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்க்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. பஸ் பழுதடைந்த நிலையில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை, பின்னால் வாந்த லொறி மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பஸ் சாரதியும் பஸ்ஸில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளதுடன் லொறியின் சாரதியும் லொறியில் பயணித்த மற்றுமொருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.