அம்பலந்தொட்ட சூட்டுச் சம்பவம் – இன்னும் ஒருவர்ம் அடையாளம் காணப்படவில்லை.

408 0

அம்பலந்தொட்ட, மாமடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கூரிய ஆயுத தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும், சம்பவத்தில் காயமடைந்து, ஹம்பாந்தோட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவரிடம் மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான முழு விபரங்களையும் பெற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாந்தோட்ட, மாமடுவ பிரதேசத்தில் உந்துருளியில் வருகை தந்த சிலர், மற்றுமொரு குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முனைந்தனர்.

இதனை எதிர்த்த குழுவினர் கூரிய ஆயுதத்தினால் மேற்கொண்ட பதில் தாக்குதலில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ள வந்த குழுவை சேர்ந்தவர் ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்தனர்.

இதனிடையே, ரத்கம, கணேகொட பிரதேசத்தில், இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில், கூரிய ஆயுதம் ஒன்றின் மூலம் தாக்கப்பட்டு ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்ட பொழுதிலும், அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக ரத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.