யாழ். சங்கானையில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு !

42 0

யாழ்ப்பாணம் சங்கானையில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் திறப்புவிழா இன்று  செவ்வாய்க்கிழமை (25)  வலிகாமம் மேற்கு பிரதேசசபை செயலாளர் ச.பாலரூபன் தலைமையில்  இடம்பெற்றது .

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர்  பி.எஸ். எம் சார்ள்ஸ்   கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

நிகழ்வில் வரவேற்பு நிகழ்வுகளை தொடர்ந்து பாரம்பரிய அம்மாச்சி உணவகம் வடக்கு மாகாண ஆளுநரால் நாடாவேட்டி திறந்து வைக்கப்பட்டு உணவகத்தை ஆரம்பித்து வைத்தார் .

தொடர்ந்து வலிமேற்கு பிரதேசத்தின் எழுத்தாளர்கள் ,விவசாயிகள் கொளரவிக்கப்பட்டதுடன் பெண் தலைமத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது .

நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக வடமாகாணம் உள்ளுராட்சி அமைச்சு செயலாளர் செ.பிரணவநாதன் வடமாகாணம் உள்ளுராட்சி ஆணையாளர்  தேவனந்தினி பாபு யாழ் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பொ.ஸ்ரீவர்ணன் சங்கானை பிரதேச செயலர் கவிதா சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யோ.யது நந்தனன் கலந்து கொண்டதுடன் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.