மோட்டார் சைக்கிளோட்டப் பழக்குவதாகக் கூறி மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முச்சக்கரவண்டி சாரதி கைது

30 0

பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிளோட்டப் பழக்குவதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 44 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவரை அவரது கல்வி நடவடிக்கைக்காக ஏற்றி இறக்கும் சேவைக்காக முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை மாணவியின் பெற்றோர் வாடகைக்கு அமர்த்தி இருந்தனர்.

இந்நிலையில், சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (24)  தனது முச்சக்கர வண்டி திடீரென பழுதடைந்து விட்டதாகவும் , அதனால் மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி செல்வதாகவும் கூறி மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார்.

இடையில், மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு கற்று தருவதாக கூறி, தான் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து , மாணவியை முன் இருக்கையில் அமர்த்தி மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு கற்று கொடுக்கும் சாட்டில் , மாணவியை  பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

வீடு திரும்பிய மாணவி அது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து , பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்து , முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.