கரப்பந்தாட்ட பயிற்சிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்

31 0

கரப்பந்தாட்ட பயிற்சி முகாமிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கரப்பந்தாட்ட பயிற்றுனர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், சிறுவனின் பெற்றோரிடம் சிறுவனை புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள கரப்பந்தாட்ட பயிற்சி முகாமிற்கு இரண்டு நாட்கள் பயிற்சிக்காக அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

பின்னர், சந்தேக நபர் சிறுவனை ஏமாற்றி கடந்த 22 ஆம் திகதி குருணாகல், இரபடகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் கல்வி கற்கும் பாடசாலையின் கரப்பந்தாட்ட பயிற்சியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.