காரைநகர் களபூமி பகுதியில் நேற்று திங்கட்கிழமை (24) மாலை மினி சூறாவளி வீசியதில் , குடிசை ஒன்றின் மீது பனை மரம் முறிந்து விழுந்துள்ளது.
அதன் போது குடிசையில் இருந்த சிறுவன் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
குறித்த குடிசை வீட்டில் நால்வர் கொண்ட குடும்பம் வசித்து வந்ததாகவும் , குடிசை மீது பனை மரம் முறிந்து விழுந்ததால் , அவர்கள் தங்குவதற்கு வீடின்றி இன்னல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.