லுணுகலை சோலன்ஸ் தோட்டத்தில் நபர் ஒருவர் தேயிலை கொழுந்து சேகரிப்பு நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (24) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
சோலன்ஸ் தோட்டம் சுவீன்டன் பிரிவைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று மதியம் வீட்டை விட்டுச் சென்றதாகவும், பின்னர் வீடு திரும்பாததையடுத்து பொலிஸார் விசாரணை நடத்திய போது, கொழுந்து சேகரிக்கும் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர் .