இந்த விபத்து நேற்று (24) திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
திவுலப்பிட்டிய, கடவல பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
திவுலப்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த தொலை தொடர்பு கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த சாரதியின் குழந்தையும், மாமியாரும் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.