அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நீடிப்பதை அனுமதிக்க கூடாது

296 0

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் சசிகலாவை பதவியில் நீடிப்பதை அனுமதிக்க கூடாது என தேர்தல் கமிஷனிடம் தமிழக ஆம் ஆத்மி கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக அமைப்பாளர் வசீகரன் தலைமையிலான பிரதிநிதிகள் டெல்லியில் தேர்தல் கமிஷனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். இதுபற்றி அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் சசிகலாவை இடைக்கால பொதுச் செயலாளராக கொண்ட அ.தி.மு.க.வின் ஆட்சி நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவருடைய மந்திரிகளும் சசிகலாவின் தலைமையை கொண்ட அணியினராக உள்ளனர்.

தற்போது அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவரை பதவியில் நீடிக்க தேர்தல் கமிஷன் அனுமதிக்க கூடாது. எனவே சசிகலாவின் பதவி குறித்து தேர்தல் கமிஷன் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.