நீரில் மூழ்கி சிறுமி பலி

263 0

கன்தரு – நுனவெல்ல கடல் கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் திடீரென ஏற்பட்ட அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிழந்தவர் நுகேகொட – கங்கொடவிலயைச் சேர்ந்த 11 வயதான பாடசாலை மாணவி என தெரிவிக்கப்படுகிறது.

உறவினர் வீட்டுக்குச் சென்ற அவர் தமது பெற்றோருடன் நேற்று மாலை கடலுக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் தாய் மற்றும் தந்தை நீந்தி கரை சேர்ந்தனர்.

சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.