பொல்லால் தாக்கப்பட்டு மூதாட்டி கொலை ; தப்பியோடிய சகோதரனின் மகன் கைது

33 0

காலி பிரதேசத்தில் கொனபீனுவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்வல பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக கொனபீனுவல பொலிஸார் தெரிவித்தனர்.

கொனபீனுவல, அளுத்வல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் சகோதரனின் மகன் எனவும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட மூதாட்டி கடந்த 21 ஆம் திகதி பொசன் பௌர்ணமி வழிபாடுகளை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்குச் சென்ற பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொனபீனுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.