இறப்பர் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு !

32 0

இறப்பர் தோட்டத்தில்  கடந்த 18ஆம் திகதி பசறை. பிபிலை  வீதி 13ம் கட்டை  பகுதியில்  கண்டெடுக்கப்பட்ட   சடலம் தியத்தலாவ பகுதியில் வசிப்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தியத்தலாவ ஹெல கதுரகமுவ பகுதியில் வசிக்கும் எம்.கே.ஏ.சந்தன கித்சிறி பெரேரா கரேஜ்  உரிமையாளர் எனவும் ஹப்புத்தளை உள்ளூராட்சி   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள்  உறுப்பினர் எனவும்  அடையாளம் காணப்பட்டுளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த 16 திகதி வாகன உதிரிபாகங்கள் வாங்க செல்வதாக வெளியில் சென்றதாகவும் அவர் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தியதலாவ பொலிஸ் நிலையத்தில் 22 ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இதன்படி, கடந்த 18ஆம் திகதி பசறை பிபிலை வீதியில் 13 ம் கட்டை இறப்பர் தோட்டத்தில்  கண்டெடுக்கப்பட்ட நபரின் சடலம் பதுளை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில்  சடலத்தை உறவினர்கள் அடையாளம் காணப்பட்டுளதாக தெரிவிக்கப்படுகின்றது .

குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் பிரேத பரிசோதனை  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.