ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிணை – சிறையிலிருந்து வெளியேறினார்

32 0
image
விக்கிலிக்ஸ் ஸ்தாபகர்களில் ஒருவரான அசஞ்சேயிற்கு பிணைவழங்கப்பட்டுள்ளது அவர் லண்டனின் பெல்மார்ச் உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர் அவர் ஸ்டான்செட் விமானநிலையத்தில் விமானத்தில் ஏறும் படங்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு பசுபிக்கில் உள்ள மரியனா தீவில் உள்ள சமஸ்டிநீதிமன்றில் அசஞ்சே நீதிமன்றத்தில் ஆஜராவார் .அவர் தேசபாதுகாப்புதகவலை சட்டவிரோதமாக பெறுவதற்கும் பரப்புவதற்கும்சதி செய்த உளவுத்துறை குற்றச்சாட்டில் குற்றத்தை  ஏற்றுக்கொள்வார் என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் பின்னர் அவர் தனது நாடான அவுஸ்திரேலியா திரும்புவார்.