பதுளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது !

25 0

பதுளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் நேற்று  திங்கட்கிழமை மாலை (24) 12,540 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பதுளை பஹலகம, பதுலுபிட்டிய மற்றும் நெலும்கம பிரதேசங்களில் வசிக்கும் 61, 67, 68 மற்றும் 55 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் இருந்து போதைப்பொருள் கொண்டு வருவதாக பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய 61 வயதான சந்தேகநபர் பதுளையின் புறநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 6,600 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மேலும் மூவர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒருவரிடம் 5,730 மில்லிகிராம் ஹெரோயின் இருந்ததாகவும், மற்ற இருவரிடம் 120 மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.