நாங்கள் நிச்சயமாக அரசாங்கத்தை அமைப்போம் என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கம்பளையில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயல்படுவது தொடர்பில் கட்சியால் உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.
இதனை நாங்கள் பின்னரே முடிவு செய்வோம்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எம்மிடம் ஏராளமான வேட்பாளர்கள் உள்ளனர்.
நாங்கள் முடிவு எடுப்பது சவாலானது என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.