காலியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

29 0

காலி பிரதேசத்தில் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்பகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (24) திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யக்கலமுல்ல, பொல்பகொட பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.