காய்ச்சலுக்கு மருந்தெடுத்த பெண் உயிரிழப்பு – யாழில் சம்பவம்

40 0

யாழ்ப்பாணம், சாவற்காட்டு பகுதியில் காய்ச்சலுக்கு மருந்து எடுத்து, மருந்தை உட்கொண்ட  நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

63 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்காக 22ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று, மருந்தினை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

மருந்தினை உட்கொண்ட பின்னர், மறுநாள் 23ஆம் திகதியான நேற்றைய தினம் உடல் நிலை மிக மோசமாகி மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.