வன பகுதியில் ஏற்பட்ட தீயால் 20 ஏக்கருக்கும் அதிகமான காணி எரிந்து நாசம் !

38 0

வெல்லவாய, வருணகம மற்றும் கொட்டவெஹெரகல வன பகுதியில் ஏற்பட்ட தீயினால் இருபது ஏக்கருக்கும் அதிகமான காணி எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது . 

குறித்த பிரதேசத்தில் நிலவும் கடும் வறட்சியான வானிலை  மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக  வனப்பகுதியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு தீ பரவியுள்ளது .

எனினும், வன பாதுகாப்பு அதிகாரிகள், வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த வனப்பகுதியில் யாரோ தீ வைத்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதால் சந்தேக நபரைக் கைது செய்ய  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .