2024இல் இதுவரையான காலப்பகுதியில் 27 இந்திய படகுகள் கைப்பற்றல் ; 204 மீனவர்கள் கைது

61 0

2024 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 27 இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 204 மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த  22 மற்றும் 23 ஆம் திகதி அதிகாலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கடற்படையினரால் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்த 18 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.