15 நாட்களாக காணாமல்போயிருந்த முதியவர் வயலிலிருந்து சடலமாக மீட்பு

29 0
களுத்துறை, நாகொடை பிரதேசத்தில் உள்ள வயல்வெளி ஒன்றிலிருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை, அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய முதியவரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 15 நாட்களாக காணாமல் போயிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.