பொன்சேகாவிற்கு எதிராக இந்த வாரம் நடவடிக்கை

32 0

முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவிற்கு எதிராக கட்சி இந்த வாரம் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயற்குழு சரத்பொன்சேகாவிற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து ஆராய்வதற்காக கூடவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியில் தனது பதவிநிலைகளிற்கு அப்பால் ஒருவர்கட்சியின் கொள்கைகளிற்கு ஏற்ப செயற்படவேண்டும்,சரத்பொன்சேகா ஒழுக்கமான முறையில் நடந்துகொள்கின்றார் இல்லை என ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

அவர் கட்சியில் இருக்கும் வரை கட்சி தலைவருடன் இணைந்து செயற்பட பழகிக்கொள்ளவேண்டும், என தெரிவித்துள்ள ரஞ்சித்மத்துமபண்டார இதன்காரணமாக நாங்கள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராகின்றோம்,இந்த வாரம் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என கட்சியின் செயற்குழு தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண பாராட்டி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள ரஞ்சித்மத்துமபண்டார அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சரத்பொன்சேகா போல ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை ராஜிதசேனாரட்ண கடுமையாக விமர்சிக்கவில்லை என ரஞ்சித்மத்துபண்டார தெரிவித்துள்ளார்.