பொலிஸாரால் பல நாட்களாக தேடப்பட்டு வந்தவர் சிக்கினார் !

31 0
தென்னிலங்கை பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த, பொலிஸாரால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரைக்  கைது செய்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்.

சந்தேக நபர் பெப்பிலியான பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும் தென்னிலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்காக நீதிமன்ற பிடியாணைகள்  இவர் மீது உள்ளதாகவும் இவர் பொலிஸாரால் பலநாட்களாக தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவரிடமிருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி,  10 தோட்டாக்கள் ,  2200 மில்லிகிராம் ஹெரோயின் ,  கையடக்கத் தொலைபேசி ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.