பஸ் – முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து ; தாய், மகள் பலி ; தந்தை படுகாயம்

35 0

மாத்தளை, பலாபத்வல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (22) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வத்தேகமையிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்துள்ள நிலையில் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்மிக்கா பத்மினி என்ற 54 வயதுடைய தாயாரும் சச்சினி தாரக்கா என்ற 17 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.