கண்டியில் ரயிலுடன் மோதி 19 வயது இளைஞன் உயிரிழப்பு

35 0

கண்டி பிரதேசத்தில் கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுகண்ணாவை – பிலிமத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் மார்க்கத்தில் நேற்று (21) ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.