அம்பாந்தோட்டை பிரதேசத்தில் லுணுகம்வெஹர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி மூன்று மாடுகளைத் திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகம்வெஹர பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்டதாகக் கூறப்படும் மாடுகளின் மதிப்பு 10 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகம்வெஹர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 24,31 மற்றும் 48 வயதுடைய மூன்று நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.