உள்நாட்டு துப்பாக்கிகள், சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

55 0

மொனராகலை பிரதேசத்தில் மெதகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  திம்புல்தென பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன்  இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்தனர்.

மெதகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெதகம மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32 மற்றும் 47 வயதுடைய இரண்டு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகள், 9 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.