எகொட உயனவில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

35 0

மொரட்டுவை பிரதேசத்தில் எகொட உயன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக எகொட உயன பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 2 மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.