வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்

25 0

வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல , வடுகொடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மீதொட்டமுல்ல, வடுகொடவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்ய முற்படும் போது சந்தேக நபர் வீட்டில் இருந்த நாய்களை ஏவிவிட்டு பொலிஸாரை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதன்போது,  சந்தேக நபரை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.