கெஹெலியவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு

22 0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக வாகன முறைகேடு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து, ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களை மீள கையளிக்காமை தொடர்பில் சிவில் பிரதிநிதி ஒருவர் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தமைக்கு அமையவே விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.