ஆதிவாசி மக்களுக்கு குடிநீர் மற்றும் கழிவரை வசதிகள்

231 0

ஆதிவாசி மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் இயற்கை கழிவறை வசதிகளை வழங்க அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
இந்த வேலைத்திட்டம் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளது. ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னிலா அத்தோவுடனான சந்திப்பில் இது பற்றி ஆராயப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரவிதான தெரிவித்துள்ளார். ஆதிவாசிகளின் தலைவர் தமது சமூகம் பற்றிய புள்ளிவிபரங்களை முன்வைத்தார். 6 மாவட்டங்களைச் சேர்ந்த 57 கிராமங்களில் ஆதிவாசி மற்றும் கலப்பு குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சம் பேர் வரை வசிக்கிறார்கள் என அவர் கூறினார்.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆதிவாசிகள் சமூகத்திற்கு குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் வழங்கப்படும். இது தொடர்பான அறிக்கையொன்றை அமைச்சர் ஹக்கீம் உலக நீர் மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளதாக திரு.சந்திரவிதான கூறியதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.