பேலியகொட – களனி கங்கையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு !

26 0

பேலியகொட பகுதியில் தனியார் நிறுவனமொன்றின் பின்புறத்திலுள்ள களனி கங்கையில் இருந்து இனந்தெரியாத ஆண்  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சடலம் நேற்று  திங்கட்கிழமை (17) மாலை மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் 50 முதல் 60 வயதிற்கிடைப்பட்டதாக இருக்கலாமெனவும் 05 அடி 06 அங்குல உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.