வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளுடன் இருவர் கைது !

28 0
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் இரண்டு மகசீன்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, அதே  வீட்டில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட  துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள்  45 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல மற்றும் ஹொரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.