மக்கள் மீது நம்பிக்கை வைத்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டி! – வானதி சீனிவாசன்

42 0

மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுவதாக பாஜக மகளிர் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சி எப்படி ஓட்டு வாங்க போகிறது என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் எனக்கூறிய அவர், அடுத்த 2 ஆண்டுகள் மக்கள் பணி செய்து வெற்றி கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டார்.