முதியோர் இல்லத்துக்கு நன்கொடை வழங்கிய ஆயுள் தண்டனை கைதி!

29 0

ஈரோட்டில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோலில் வெளியே வந்த கைதி ரத்த தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூர் அடுத்த முஸ்தபா தோட்டத்தை சேர்ந்த தனபால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் தனது வயதான தந்தையை பார்ப்பதற்காக பரோலில் வெளியே வந்த அவர், அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்தார்.

மேலும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று தான் சிறையில் பெற்ற
சம்பளமான 5 ஆயிரத்து 600 ரூபாயையும் நன்கொடையாக வழங்கினார்.