யேர்மனி ஹாம்பர்க்கில் கோடரியால் அச்சுறுத்திய நபர் சுடப்பட்டார்

42 0

யேர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காவல்துறை அதிகாரிகளை கோடரியால் தாக்குதல் நடத்த அச்சுறுத்தியதை அடுத்து அந்நபரை காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று போலந்து – நெதர்லாந்து நாடுகள் ஐரோப்பியக் கிண்ணத்திற்காக மோதுகின் உதைபந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளது. இங்கே நெதர்லாந்து ரசிகர்கள் 40 ஆயிரம் பேர் வரையில் இந்நகரல் கூடியுள்ளனர்.

குறித்த நபர் தீக்குளிக்கும் சாதனத்தையும் எடுத்துச் சென்றுள்ளார்.