சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கொழும்பு 10 பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 75 ஆயிரம் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.