பதியத்தலாவயில் வேன் மோதி ஒருவர் உயிரிழப்பு ; சாரதி தப்பியோட்டம்

39 0

அம்பாறை, பதியத்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதியந்தலாவ – கோமானை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

கோமானையிலிருந்து பதியத்தலாவ நோக்கிப் பயணித்த வேன் ஒன்று பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பாதசாரி படுகாயமடைந்துள்ள நிலையில் பதியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை, பதியத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் பதியத்தலாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான வேன் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதியத்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.