நீர் குழாயில் வெடிப்பு : நள்ளிரவுக்குள் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்

32 0

கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மஹரகம பகுதிக்கு நீர் கொண்டு செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் ஹோமாகம புறநகர்ப் பகுதியின் பல பகுதிகளில் இடைநிறுத்தப்பட்ட நீர் விநியோகம் இன்று (17) நள்ளிரவுக்குள் வழமைக்கு திரும்பும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை (17) அதிகாலை ஹைலெவல் வீதியில் கொடகம சந்திக்கு அருகில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி இந்த குழாய் மீது மோதியதில் குழாயில் பலத்த சேதம் ஏற்பட்டது.

இதனால், கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டி, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொடை ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.