களுத்துறையில் 1,080 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது

47 0
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்பொல பகுதியில் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, மொரந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 1,080 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.