இலங்கைக்கான அல்ஜீரிய தூதுவருக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு !

77 0

இலங்கைக்கான அல்ஜீரியாவின் தூதுவர் அலி செய் மற்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் இருவருக்கும் இடையிலான சந்திப்பு பாராளுமன்றில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டிருந்தார்.

இந்த சந்திப்பின் போது அல்ஜீரியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில், இலங்கையின் தேயிலை மற்றும் கறுவாப்பட்டை ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது , சுற்றுலாத்துறை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.