வடக்கிலிருந்து புத்தளம், கொழும்புக்கு கடத்தப்பட்ட 70 ஆடுகள், 18 மாடுகள் மீட்பு – நால்வர் கைது!

43 0

வவுனியா ஊடாக  A9 வீதியூடாக பயணித்த இரண்டு வாகனங்களை  சோதனையிட்ட பொலிஸார்  சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகளை மீட்டுள்ளனர் .

வியாழக்கிழமை (13) ஓமந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 70 ஆடுகளுடன் கூடிய வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை மேலும் ஒரு வாகனத்தை சோதனையிட்ட போது  முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட 18 மாடுகளுடன் கூடிய வாகனத்தையும் பொலிஸார் மீட்டதுடன் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களை விசாரணை செய்ததன் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .