கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றவர் கைது

42 0

போதைப்பொருள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுவிக்க பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் நபரொருவர் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டதாக நாகொல்லாகம பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் ஹிரியால பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 28 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற நபரொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட  இரண்டு சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கூறி பொலிஸாருக்கு 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (14) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.