7 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு !

55 0

நாட்டில் ஏழு மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், காலி, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில்  டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 26,084 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன் எண்ணிக்கை 9,558 ஆகும்.