ஹெரோயின் போதைப்பொருளுடன் ஈரான் பிரஜை கைது

285 0

ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட ஈரான் நாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்கவிமான நிலையத்தில்வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் குறித்த 48 வயதான ஈரான் நாட்டுப் பிரஜையை கைதுசெய்துள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 20 மில்லியன் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.