யாழ்ப்பாணம் சுன்னாகம் சமிக்ஞை விளக்கு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் ஹயஸ் வாகனத்துடன் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சுன்னாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் தலைக்கவசம் இன்றி பயணித்த நிலையில் பொலிசார் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திய போது சமிக்ஞை விளக்குப் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இளைஞர் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.