கழுத்தில் இருந்த தங்க மாலை கொள்ளையிடுவதற்காகவே கொட்டதெனியாவ பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.
தனது மகளது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரியவர் நேற்று கைதுசெய்யப்பட்டார்.