சாரதி உறங்கியதால் முச்சக்கரவண்டி விபத்து ; இருவர் காயம்

60 0

ஹொரணை – கொழும்பு வீதியில் உள்ள கடைத் தொகுதிகளுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கடைத் தொகுதிகளில் உள்ள கடையொன்றின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணும் குழந்தையும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.